சமரச சுத்த சன்மார்க்க சங்கம், வள்ளலார் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரால் நிறுவப்பட்டது. இவர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சமூக-சமய சீர்திருத்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஆன்மீகத்தில் கொண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன. ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.